இலண்டன் மாநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரெதிர்ப்புக்காட்சிகள் சில…


முழுவீச்சில்...

இனப்பாகுபாடின்றி..

போராட்டக்காட்சிகள்..

பதாகையில் ஒன்று...
இன்னும் வரும்…
நிலா…
இலண்டன் மாநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரெதிர்ப்புக்காட்சிகள் சில…


முழுவீச்சில்...

இனப்பாகுபாடின்றி..

போராட்டக்காட்சிகள்..

பதாகையில் ஒன்று...
இன்னும் வரும்…
நிலா…
சுதந்திரம்... இல் பதிவிடப்பட்டது
முருகனே! முருகதாஸா! உருகுதையா மனமே!
கருகினாயே தீயினிலே! கலங்கினோமே நாமும்;!
அருகினிலே> உன்னருகினிலே வரமுடியுமா அடலே!
தருகிறதே துக்கம் தனயனே நின் மறைவே!
ஐ நா வினின் முன்னேகி உன்துயர் தெரிவிக்க
உன்னையே எரித்தவனே! உன்னத மைந்தனே!
தன்னலம் மறந்தவனே! தனிநிகர் மைந்தனே!
தமிழ்த்தாய் தன்னின் தவப்புதல்வனே! தளிரே!
வாழவேண்டிய வயதில் வானுலகம் புகுந்தவனே!
வாழவேண்டும் நாமென வாய்க்கரிசி வாங்கினாயே!
ஆழமாகநம் மனதில் விடுதலைத் தீவளர்க்க
மூளவைத்தாய் தீதனையே! மூழ்கிறோம்; துயரினிலே!
படிப்பிலும் மிளிர்ந்தவனே! பட்டமும் பெற்றாயே! – இனத்
துடிப்பாலே இன்னுயிர் தனையே ஈந்தவனே! சொகுசுவாழ்வை
முடித்திங் கிருந்து போகையிலும் முடிவை முன் வைத்தாயடா!
துடிப்படங்கிப் போகும் வரைநாமுன் எண்ணப்படி போராடுவோமடா!
துக்கத்துடன்
நிலா
தியாகச்செம்மல் முருகதாஸின் உயிர்கொடை நிகழ்வு பற்றிய பிபிசி செய்திக்கு இந்த சுட்டியை அழுத்தவும்.
Uncategorized இல் பதிவிடப்பட்டது